உம்மை வெறுத்த ஊர்கள்!

உம்மை வெறுத்த ஊர்கள்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:13-16.13 கோராசீன் பட்டணமே, உனக்கு ஐயோ, பெத்சாயிதா பட்டணமே, உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள்.14 நியாயத்தீர்ப்புநாளில் உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும்.15 வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி,16 சீஷரை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டைபண்ணுகிறான், என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைபண்ணுகிறான் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:

தம்மை உயர்வாய் எண்ணிக் கொண்டு,

தவற்றில் உழல்வோர் சிலருண்டு.

செம்மை வழியைத் தூற்றிக் கொண்டு,

சிதறி அழிந்தோர் பலருண்டு.

உம்மை வெறுத்த ஊர்கள் அன்று,

ஒழிந்துபோன நிகழ்வுண்டு.

மும்மை இறையே, தந்தேன் இன்று;

மெய்யில் என்றும் மகிழ்வுண்டு!

ஆமென்.

Leave a Reply