உயிர்த்தெழுதல்!

உயிர்த்தெழுதல்!

நற்செய்தி: யோவான் 5:29.

29. அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.

நல்வழி:

நன்மை செய்வோர் உயிர்த்தெழுந்து,

நல்லிறையோடு ஆண்டிடுவார்.

வன்முறையாளரும் எழும்பி வந்து,

வாடா நெருப்பில் மாண்டிடுவார்.

அன்பின் வடிவாம் மகன் அன்று,

அவரவர் பயனை அளந்திடுவார்.

இன்று எதிர்த்து இகழ்பவரோ,

இனிய மீட்பை இழந்திடுவார்!

ஆமென்.

Leave a Reply