நேர்மையான தீர்ப்பு!
நற்செய்தி: யோவான் 5:30.
நல்வழி:
தீர்ப்பின் தன்மை எப்படி என்றால்,
தீர்ப்புரைக்கும் நடுவர் போன்றாம்.
நேர்மைக் கண்கள் மூடியிருந்தால்,
நிகழும் தீங்கில் கெடுவர் ஒன்றாம்.
பார்க்கும் நாமும் திருந்தி நின்றால்,
பல பேருக்கு விடிவு என்றாம்.
ஆர்ப்பொலியில் ஆண்டவர் வந்தால்,
அந்தத் தீர்ப்பின் முடிவு நன்றாம்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.