உயிரே! உயிரே!
ஒருவர் இருவர் இறப்பது கண்டு,
ஏதோ விபத்தெனச் செல்கின்றார்.
பெருந்திரள் மக்கள் மடிவது கேட்டு,
பிறவிப் பயனெனச் சொல்கின்றார்.
குருதியெடுத்தல் சரியேயென்று,
கொள்பவர் இன்று வெல்கின்றார்.
அருமை உயிரோ ஆண்டவர் ஈவு;
அதை ஏன் மக்கள் கொல்கின்றார்?
-கெர்சோம் செல்லையா.