உம்முள் முழுகுகிறேன்!

உம்முள் முழுகுகிறேன்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:49-50.

49பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.
50ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்.

கிறித்துவில் வாழ்வு:
துறத்தல் என்றும் பொருள் கொண்டிடுவார்,
தூய தமிழ்ச் சொல் முழுகலுக்கு.
இறத்தல் என்றே பொருளைக் கண்டீர்,
எம்மை மீட்டு எழுப்புதற்கு.
புறத்தில் காணாத் தீமையும் மிகுதி;
புரியா நெஞ்சுள் அழுகுகிறேன்.
அறத்தின் வழிதான் மீட்பு என்று,
அறிந்து உம்முள் முழுகுகிறேன்.
ஆமென்.

Leave a Reply