பற்றிழந்தோர் பிரிக்கிறார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:51-53.
51நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்கவந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்கவந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.52எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள். தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார். கிறித்துவில் வாழ்வு: பற்றை இறைவன் பகிரும்போதே பலபேர் பகடியாய்ச் சிரிக்கிறார். உற்றாரில் சிலர் உதவாதென்றே, உண்மையைச் சினந்து எரிக்கிறார். குற்றம் இல்லா இயேசுவின்மீதே, குற்ற வலையை விரிக்கிறார். வெற்றிடமாக வாழ்வை இழந்தே, விண்ணின் அமைதியும் பிரிக்கிறார்! ஆமென். |