உத்திரம் மறந்து துரும்பைத் திட்டும்,
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:41-42.
41 நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?
42 அல்லது நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரனை நோக்கி: சகோதரனே, நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.
கிறித்துவில் வாழ்வு:
உத்திரம் ஒன்றைக் கண்ணில் வைத்து,
ஒருசிறு துரும்பைத் திட்டுகிறேன்.
பித்தளையாகப் பல்லை இளித்து,
பொன்மேல் சினத்தைக் கொட்டுகிறேன்.
நித்தமும் தவற்றால் நெஞ்சை நிரப்பி,
நிம்மதி இழந்து முட்டுகிறேன்.
பித்தனாய் நானும் மாறாதிருக்க
பேரருட் கதவைத் தட்டுகிறேன்!
ஆமென்.
![Image may contain: text](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/46507291_2097155563648568_621045661046931456_n.jpg?_nc_cat=102&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=cf2ee03db32c17fb2587ec9b328e05d2&oe=5C7EE958)