இறை ஒலி!

இறையொலி!

நற்செய்தி : யோவான்: 5:25.   

நல்வழி: 


பிறந்தோர் உள்ளில் இறையின் பாட்டு,

பிரியா அன்பால் ஒலிக்கட்டுமே.

இறந்தோர் நெஞ்சும் இதனைக் கேட்டு, 

இயேசு அருளால் விழிக்கட்டுமே.

மறந்தோர் என்னும் நாமும் இன்று,

மறு பிறப்பாகிச் சொலிக்கட்டுமே.

சிறந்தோர் சூழ, வரும் மகன் அன்று,

சிறுமை யாவும் ஒழிக்கட்டுமே! 


ஆமென்.


-கெர்சோம் செல்லையா. 

Leave a Reply