இறைவனே கண் பாரய்யா!

இறைவனே கண் பாரய்யா!

செத்தவனைக் கொன்றவனாக்கிக்
கொல்பவனை உத்தமனாக்கும்,
கொடியரின் உலகமய்யா.
கோடிகளின் கலகமய்யா.

வித்தவனைத் தின்றவனாக்கித்
தின்றவனை வித்தகனாக்கும்,
வீணரின் கூட்டமய்யா;
வேண்டாம் ஆட்டமய்யா.

சத்துணவை முட்டையாக்கி,
முட்டையைக் காசுமாக்கிச்
சாப்பிட்டார் அலுவரய்யா;
சரியென்பார் தலைவரய்யா.

மொத்தமும் ஊழல் என்றால்,
முழுகுவோர் அறிவர் என்றால்,
இத்தரை வேண்டாமய்யா;
இறைவனே, கண்பாரய்யா!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: food

Leave a Reply