இறைவனே கண் பாரய்யா!
செத்தவனைக் கொன்றவனாக்கிக்
கொல்பவனை உத்தமனாக்கும்,
கொடியரின் உலகமய்யா.
கோடிகளின் கலகமய்யா.
வித்தவனைத் தின்றவனாக்கித்
தின்றவனை வித்தகனாக்கும்,
வீணரின் கூட்டமய்யா;
வேண்டாம் ஆட்டமய்யா.
சத்துணவை முட்டையாக்கி,
முட்டையைக் காசுமாக்கிச்
சாப்பிட்டார் அலுவரய்யா;
சரியென்பார் தலைவரய்யா.
மொத்தமும் ஊழல் என்றால்,
முழுகுவோர் அறிவர் என்றால்,
இத்தரை வேண்டாமய்யா;
இறைவனே, கண்பாரய்யா!
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: food](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/37153406_1913594172004709_8661014376603451392_n.jpg?_nc_cat=0&oh=5a92faca84402f3e94c436e13be55732&oe=5BC7B546)