இறையிடம் பேசும்!

இறையிடம் பேசும்!
நற்செய்தி மாலை:மாற்கு:14:37-38.
“அதன்பின்பு அவர் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், ‘ சீமோனே, உறங்கிக் கொண்டா இருக்கிறாய்? ஒரு மணிநேரம் விழித்திருக்க உனக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வம் உடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
ஆவியர் ஆள நம் ஆவியும் அடங்கும்;
அடங்கும்போதே, அறவழி தொடங்கும்.
சாவினை வழங்கும் ஊன்வழி முடங்கும்.
சரி செய்தாலே, சாத்தனும் மடங்கும்.
தாவிடும் குரங்கென இருந்தது போதும்;
தவற்றைத் திருத்துமே, தெய்வத்தின் தூதும்.
பாவியர் நெஞ்சைப் பழித்திடும் தீதும்,
பறந்துபோகுமே, இறையிடம் ஓதும்!
ஆமென்.

Image may contain: one or more people and close-up
LikeShow More Reactions

Comment

Leave a Reply