இறைமகன் தொட்டபின் இறப்பாரோ?
நற்செய்தி மாலை: மாற்கு 9:25-27.
“அப்போது மக்கள் கூட்டம் தம்மிடம் ஓடிவருவதை இயேசு கண்டு, அந்தத் தீய ஆவியை அதட்டி, ‘ ஊமைச் செவிட்டு ஆவியே,உனக்குக் கட்டளையிடுகிறேன்; இவனை விட்டுப் போ; இனி இவனுள் நுழையாதே ‘ என்றார். அது அலறி அவனுக்கு மிகுந்த வலிப்பு உண்டாக்கி வெளியேறியது. அச்சிறுவன் செத்தவன் போலானான். ஆகவே அவர்களுள் பலர், ‘ அவன் இறந்துவிட்டான் ‘ என்றனர். இயேசு அவன் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டார். அவனும் எழுந்தான்.”
நற்செய்தி மலர்:
இறைமகன் தொட்டபின் இறப்பாரோ?
இறந்தவர் எழுந்ததை மறப்பாரோ?
மறையுரை வாக்கை வெறுப்பவரோ
மறைகிறார், இதையும் மறுப்பாரோ?
பிறை நிலவாகவே நான் தேய்ந்தேன்.
பிழைகளின் பெருக்கில்தான் மாய்ந்தேன்.
நிறைவின் உருவில் இயேசு வந்தார்;
நெஞ்சைக் கொடுத்தேன், உயிர் தந்தார்!
ஆமென்.
![Image may contain: sky, tree, night, nature and outdoor](https://fbcdn-photos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-0/q92/s480x480/13781697_1182050131825787_2872565897219982692_n.jpg?oh=a1424bf1e73046eab74b3267554da205&oe=58504E1D&__gda__=1481031122_40fb06871f5255ff2c036c34cd0f2b2e)