இறப்பு என்னும் துயில்!

இறப்பு என்னும் துயில்!
நற்செய்தி மாலை:மாற்கு 14:32-34.
” பின்னர் இயேசுவும் சீடர்களும் கெத்சமனி என்னும் பெயர் கொண்ட ஓர் இடத்திற்கு வந்தார்கள். அங்கே அவர் தம் சீடரிடம், ‘ நான் இறைவனிடம் வேண்டும்வரை நீங்கள் இங்கே அமர்ந்திருங்கள் ‘ என்று கூறி, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரைத் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் திகிலும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார். அவர், ‘ எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது; நீங்கள் இங்கேயே தங்கி விழித்திருங்கள் ‘ என்று அவர்களிடம் கூறினார்.”
நற்செய்தி மலர்:
இறப்பைக் குறித்து எண்ணும்போது,
யாவரும் அடைவது திகிலாகும்.
எங்கு செல்வோம் என்றறியார்க்கு,
எட்டும் உயரம் முகிலாகும்.
பிறப்பின் பொருளை அறிவாருக்கு,
இறப்பு ஒருவகை துயிலாகும்.
பிறவி தந்த இறையுடன் இணையும்
பெரும்பேறுதான் ஒயிலாகும்!
ஆமென்.

No automatic alt text available.

Leave a Reply