இயேசு யார்?

இயேசு யார்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:66-71.  

66  விடியற்காலமானபோது ஜனத்தின் மூப்பரும் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கூடிவந்து, தங்கள் ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தி:

67  நீ கிறிஸ்துவா? அதை எங்களுக்குச் சொல் என்றார்கள். அதற்கு அவர்: நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள்.

68  நான் உங்களிடத்தில் வினாவினாலும் எனக்கு மாறுத்தரம் சொல்லமாட்டீர்கள், என்னை விடுதலைபண்ணவுமாட்டீர்கள்.

69  இதுமுதல் மனுஷகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பார் என்றார்.

70  அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார்.

71  அப்பொழுது அவர்கள்: இனி வேறு சாட்சி நமக்கு வேண்டுவதென்ன? நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  

கொன்றுபோடும் எண்ணம் கொண்டு,  

கொடியோர் கேட்ட கேள்வியினை,  

இன்று நமது நாட்டோர் கேட்டால் ,  

என்ன சொல்வீர் இயேசுவினை?  

அன்று இயேசு மொழிந்தது போன்று, 

அவரை இறைமகன் என்றழைப்பேன். 

நன்று என்று ஏற்கும் வரைக்கும்,  

நாட்டோருக்கு நான் உழைப்பேன்!  

ஆமென்.  

-கெர்சோம் செல்லையா. 

Leave a Reply