குற்றமற்றோர்மீது குற்றம் சாட்டல்!

முடிவெடுத்துக் கூறும் குற்றச்சாட்டு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:1-2.
1 அவர்களுடைய கூட்டத்தாரெல்லாரும் எழுந்திருந்து, அவரைப் பிலாத்துவினிடத்திற்குக் கொண்டுபோய்:2 இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், ராயருக்கு வரிகொடுக்க வேண்டுவதில்லையென்றும் சொல்லி, ஜனங்களைக் கலகப்படுத்தக் கண்டோம் என்று அவர்மேல் குற்றஞ்சாட்டத் தொடங்கினார்கள்.

கிறித்துவில் வாழ்வு:

கொல்லும் முடிவை முதலில் எடுப்பார்;
குற்றச்சாட்டைப் பிறகு தொடுப்பார்.
நல்லோர் என்று காட்சி கொடுப்பார்.
நம்பவைத்தே யாவும் கெடுப்பார்.
இல்லந்தோறும் மறைந்து இருப்பார்.
எண்ணும்போதோ வெளியே பெருப்பார்.
எல்லாம் காணும் இறையும் பொறுப்பார்,
எனினுமிவரோ இயேசை வெறுப்பார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா

Leave a Reply