இப்படிப்பட்ட பற்றுறுதி!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:9-10.
9 இயேசு இவைகளைக் கேட்டு அவனைக் குறித்து ஆச்சரியப்பட்டு, திரும்பி, தமக்குப் பின்செல்லுகிற திரளான ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
10 அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பிவந்தபோது, வியாதியாய்க்கிடந்த வேலைக்காரன் சுகமடைந்திருக்கிறதைக் கண்டார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
பற்று கொண்டோம் என்றுகூறி,
பலபேர் முன்பு உயர்த்தும் நாம்,
சற்று நேரம் நமது பற்றைச்
சரிதானோவென ஆய்வோம்.
வெற்று வேட்டாய் வெடியாதிருக்க,
வேண்டும் பற்றில் தாழ்மை.
கற்று நாமும் தாழாவிட்டால்,
காண்போம் வாழ்வில் ஏழ்மை!
ஆமென்.
![Image may contain: text](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/47392999_2109105535786904_5874158815766642688_n.jpg?_nc_cat=102&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=b0a1b2518189c0daad603b4a568d1da9&oe=5C9DDAF8)