இன்றே மீட்பார், கிறித்தேசு!

இன்றே மீட்பார், கிறித்தேசு!
நற்செய்தி மாலை: மாற்கு 11:8-11.
“பலர் தங்கள் மேலுடைகளையும், வேறு சிலர் வயல் வெளிகளில் வெட்டிய இலைதழைகளையும் வழியில் பரப்பினர். முன்னேயும் பின்னேயும் சென்றவர்கள், ‘ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா! ‘ எஇன்றே மீட்பார், கிறித்தேசு!ன்று ஆர்ப்பரித்தனர். அவர் எருசலேமுக்குள் சென்று கோவிலில் நுழைந்தார். அவர் அனைத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு, ஏற்கெனவே மாலை வேளையாகி விட்டதால், பன்னிருவருடன் பெத்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.”
நற்செய்தி மலர்:
காற்று, நெருப்பு, மழையினிலே,
கடவுளின் நேர்மை காண்பவரே,
போற்றும் புவியோராட்சியிலே,
புனிதம் எதுவும் கண்டீரா?
நேற்று இன்று பார்த்ததுதான்,
நாளை திரும்பும் என்றறிந்து,
ஏற்றுக் கொள்வீர் இறையரசு;
இன்றே மீட்பார், கிறித்தேசு!
ஆமென்.

Image may contain: sky and outdoor

Leave a Reply