கட்டப்பட்ட கழுதை நானே!

கட்டப்பட்ட கழுதை நானே!
நற்செய்தி மாலை: மாற்கு 11: 4-7.
“அவர்கள் சென்று ஒரு வீட்டுவாயிலுக்கு வெளியே, தெருவில் ஒரு கழுதைக் குட்டியைக் கட்டி வைத்திருப்பதைக் கண்டு அதை அவிழ்த்துக் கொண்டிருக்கையில் அங்கே நின்றுகொண்டிருந்த சிலர் அவர்களிடம், ‘ என்ன செய்கிறீர்கள்? கழுதைக் குட்டியையா அவிழ்க்கிறீர்கள்? ‘ என்று கேட்டனர். அவர்கள் இயேசு தங்களுக்குக் கூறியபடியே சொல்ல, அங்கு நின்றவர்களும் போகவிட்டனர். பிறகு அக்கழுதைக்குட்டியை இயேசுவிடம் கொண்டு வந்து, அதன் மேல் தங்கள் மேலுடைகளைப் போட, அவர் அதன் மீது அமர்ந்தார்.”

நற்செய்தி மலர்:
கட்டப்பட்ட கழுதை நானே.
கட்டவிழ்க்க, பயன்படுவேனே.
திட்டமிடும் இறைவன் முன்னே,
தெண்டனிட்டுப் பணிகின்றேனே.
முட்டுந் தன்மை விட்டிடுவேனே.
முரட்டு உதையும் கைவிடுவேனே.
கெட்டவரும் மீள்வார்தானே;
கிறித்து அமர, நான் நடந்தேனே!
ஆமென்.

Image may contain: grass, outdoor and nature

Leave a Reply