இனிப்பு!

இனிப்பு வழங்கும் வாழ்வு! 


நற்செய்தி: யோவான் 2:9-10.  

நல்வழி:  

தொடங்கும் நாளில் வழங்கும் இனிப்பு,   

தொடர் பணியென்று வர வேண்டும்.  


கிடங்கும் நிறைத்து, கேட்பவர்க்களித்து,   

கேளாரடையவும் தர வேண்டும்.  


முடங்கும் நெஞ்சில் முளைக்கும் கசப்பு, 


முற்றும் முடிய அற வேண்டும்.


அடங்கும் தீது, அதற்கிறை தூது,  


ஆவியரருளில் பெற வேண்டும்!  

ஆமென்.  


-செல்லையா. 

Leave a Reply