நீரும் சாறாகும்!

நீரும் சாறானது!

நற்செய்தி: யோவான்  2:6-8.  

நல்வழி: 


நீராய் இருந்த எளியன் வாழ்க்கை,
நெருப்பாய்க் கொதித்த வேளைகளில்,
சாறாய் மாற்றிப் பகிரக் கொடுத்தீர்.  
சான்றுரைத்தேன், வல்லிறையே.  

வேராய் இருக்கும் எனது பற்றை,  
வேண்டிய ஆழம் நீட்டுகையில், 
பேறாய் மகிழ்ச்சிச் சாறருள்வீர்;  
பேதையறிந்தேன், நல்லிறையே!

ஆமென்.

-செல்லையா.

Leave a Reply