நீரும் சாறானது!
நற்செய்தி: யோவான் 2:6-8.
நல்வழி:
நீராய் இருந்த எளியன் வாழ்க்கை,
நெருப்பாய்க் கொதித்த வேளைகளில்,
சாறாய் மாற்றிப் பகிரக் கொடுத்தீர்.
சான்றுரைத்தேன், வல்லிறையே.
வேராய் இருக்கும் எனது பற்றை,
வேண்டிய ஆழம் நீட்டுகையில்,
பேறாய் மகிழ்ச்சிச் சாறருள்வீர்;
பேதையறிந்தேன், நல்லிறையே!
ஆமென்.
-செல்லையா.