இந்தியன் யார்?

இந்தியன் யார்?

சாதியைத் தாண்டிப் பார்க்கிறவன்,
சரியிணை என்று சேர்க்கிறவன்,
ஆதிக்க ஆளுமை வெறுக்கிறவன்,
அவன்தான் இனிமேல் இந்தியன்.

சமயம் கடந்து பாராதான்,
சரியிணை என்று சேராதான்,
அமைதி வாழ்வை வெறுக்கின்றான்;
அவன்தான் எதிர்ப்பு இந்தியன்!

-கெர்சோம் செல்லையா.

Leave a Reply