பொல்லார் நடுவில் நல்லார்!

நல்லோரைப் பிறரிலும் கண்டோம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 13:31
  31 அந்த நாளிலே சில பரிசேயர் அவரிடத்தில் வந்து: நீர் இவ்விடத்தை விட்டுப் போய்விடும்; ஏரோது உம்மைக்கொலைசெய்ய மனதாய் இருக்கிறான் என்றார்கள். 
கிறித்துவில் வாழ்வு:

கொல்லப் பார்க்கும் அரசனும் கண்டோம்;

கொடுமை அறிந்தோர் காப்பதும் கண்டோம்.


பொல்லா அரசரின் பொய்யும் கண்டோம்;

புனிதரைக் காக்கும் மனிதரும் கண்டோம்.

நல்லோர் என்பார் பிறரிலும் கண்டோம்;

நயவஞ்சகத்தின் நடுவிலும் கண்டோம்.

எல்லையில்லா அன்பையும் கண்டோம்;

எங்குயென்றால், இயேசுவில் கண்டோம்!

ஆமென்.

Leave a Reply