இணைதலும் பிரிதலும்

இணைப்பது இறைவன், பிரிப்பது பிசாசு!
நற்செய்தி மாலை: மாற்கு 10:5-9.
“அதற்கு இயேசு அவர்களிடம், ‘ உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார். படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், ‘ ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். ‘ இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
சிரித்து வாழ, வேண்டும் என்று,
சீரிய கருத்து, கொண்டவரே,
கரித்து கொட்டும், மனிதர் முன்பு,
கடவுளின் வாக்கு, எண்வீரே.
விரித்து வைக்கும், வலையில் கன்று,
விழுமா என்று, பார்ப்பார் போல்,
பிரித்து வைக்கும், நோக்கில் இன்று,
பிசாசும் உழைப்பது, காண்பீரே!
ஆமென்.

No automatic alt text available.
LikeShow More Reactions

Comment

Leave a Reply