அவர் அடிக்கப்பட்டபோது!
நற்செய்தி மாலை: மாற்கு: 14:65.
“பின்பு சிலர் அவர்மேல் துப்பவும், அவர் முகத்தை மூடி அவரைக் கையால் குத்தி, ‘ இறைவாக்கினனே, யார் எனச் சொல் ‘ என்று கேட்கவும் தொடங்கினர். காவலரும் அவரைக் கன்னத்தில் அறைந்தனர்.”
நற்செய்தி மலர்:
வந்தவர் போனவர் அடிக்கின்றார்;
வசைச் சொல்லாலும் இடிக்கின்றார்.
தந்தவர் யார் எனத் தெரியவில்லை;
தலையை மூடிப் பிடிக்கின்றார்.
இந்தியக் கிறித்தவர் துடிக்கின்றார்.
எதிர்க்கும் சொல்லையும் வெடிக்கின்றார்.
மைந்தனின் வழியில் வருபவரோ,
மன்னிப்பருளி முடிக்கின்றார்!
ஆமென்.
![Image may contain: 9 people, people standing](https://fb-s-d-a.akamaihd.net/h-ak-xap1/v/t1.0-0/p320x320/17457526_1420859347944863_8506489375641292495_n.jpg?oh=1cb72b9f9b98d5f709ecda60aecd4d1e&oe=5958AD80&__gda__=1502558399_4c04e46e0efcc9a55754c09b21cf631a)