அறிவைத் தாரும் ஆண்டவரே!
இறைவாக்கு: லூக்கா 2:48-50.
48 தாய் தகப்பன்மாரும் அவரைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள்.
49 அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா என்றார்.
50 தங்களுக்கு அவர் சொன்ன வார்த்தையை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை.
இறைவாழ்வு:
காணும் கண்கள் இரண்டிருந்தும்,
காட்சியின் பொருளோ தெரியவில்லை.
பேணும் காதுகள் இரண்டிருந்தும்,
பேச்சின் ஆழமும் புரியவில்லை.
நாணும் என்னை உதறாமல்,
நல்லறிவாலே திருத்திடுமே.
வேணும் எனக்கு உம் கண்ணும்,
விண்ணின் காதும், பொருத்திடுமே!
ஆமென்.
![Image may contain: text](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/36690353_1897834663580660_6042552964340514816_n.jpg?_nc_cat=0&oh=0392a370c6fdf6ba344180e40cac5dbb&oe=5BD5F109)