அருமையான உணவு!
அவியல், கூட்டு, பொரியல் என்று,
அருமை உணவு சமைக்கின்றோம்.
துவையலில்கூட பல வகை செய்து,
தின்னும் பட்டியல் அமைக்கின்றோம்
எவைகள் நம்மில் இல்லையென்று,
இழந்த பண்பைப் பார்த்தோமா?
விவிலியம் கற்று, விளக்கம் பெற்று,
விண்ணின் தன்மை சேர்ப்போமா?
– கெர்சோம் செல்லையா.
