அன்று நடந்தத் தேர்தல்!

அன்று நடந்தத் தேர்தலிலே!  
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 23:23.  
23  அப்படியிருந்தும் அவரைச் சிலுவையில் அறையவேண்டுமென்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அவர்களும் பிரதான ஆசாரியரும் இட்ட சத்தம் மேற்கொண்டது.   
கிறித்துவில் வாழ்வு:  
அன்று நடந்தத் தேர்தலிலே,  
அவர்கள் ஏசுவை ஏற்கவில்லை.  
நன்றி மறக்கும் மனிதர்களும்,
நன்மை நாடிப் பார்க்கவில்லை.  
தொன்று தொட்டு தெரிகிறதே;    
தூய்மையாளர் வெல்வதில்லை.  
இன்று இதனால் அரசியலுள்,  
இன்பண்பாளர் செல்வதில்லை!  
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.  

Leave a Reply