அன்பைக் கடைப்பிடி!

அன்பைக் கடைப்பிடி!கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:25-28.

25அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
26அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார்.
27அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.
28அவர் அவனை நோக்கி: நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
இறைவன் திருவடி, இணைதல் எப்படி?
என்று கேட்பார் மனிதர் அடிக்கடி.
மறைநூல் சொல்லும் அன்பைக் கடைப்பிடி;
மகிழும் வாழ்வு; நீயும் கீழ்ப்படி.
உரைக்கும் மகனை வெறுக்கும் காலடி,
உலகின் உயரே நிற்பது எப்படி?
அரைக்கல்தானே அவரது நடையடி.
அதன்பின் பாரடி, அழிந்த கீழடி!
ஆமென்.

Leave a Reply