அந்நாள் – இந்நாள்!

அந்நாள் – இந்நாள்!


இல்லை இறைவன் என்றேன் அந்நாள்.

இறைதான் எல்லாம்  என்பது இந்நாள்.

நல்லோர் வாக்கு கேளேன் அந்நாள்;

நற்செய்தியாயெனக் கேட்பது இந்நாள்.

தலைமுடி நீட்டி வளர்த்தேன் அந்நாள்;

தாடையில் முடிகள் வளர்ப்பது இந்நாள்!

எல்லை தாண்டிச் சென்றேன் அந்நாள்;


இயேசு வழியில் செல்வது இந்நாள்.


-கெர்சோம் செல்லையா.

Leave a Reply