சிறிய விதை!

சிறிய விதை! பெரிய மரம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 13:18-19.

18அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாயிருக்கிறது; அதை எதற்கு ஒப்பிடுவேன்?19அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் தோட்டத்திலே போட்டான்; அது வளர்ந்து, பெரிய மரமாயிற்று; ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதின் கிளைகளில் அடைந்தது என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
சிறிய விதையாய் விதைத்தது கண்டு,
சிரித்து இகழ்ந்தவர் அன்றுண்டு.
பெரிய மரமாய் வளர்வது கண்டு,
பேசி இகழ்வரும் இன்றுண்டு.
அரிய இயக்கம் இறையரசாகும்;
அதின் தொடக்கம் அற்பமாம்.
தெரிய வருந்நாள் திடீரென்றாகும்;
தெய்வ அடிமுன் நிற்போமாம்!
ஆமென்.

Leave a Reply