இரண்டாம் அதிசயம்!
நற்செய்தி: யோவான் 4:51-54.
நல்வழி:
எப்பொழுதாயினும், எவ்விடமாயினும்,
இயேசுவின் வாக்கு நிறைவேறும்.
அப்பொழுதங்கே அளித்தது எனினும்,
அடியருக்கின்று மகிழ்வூறும்.
இப்படியாக நடைபெறுமதிசயம்,
எண்ணிப் பார்ப்போம், நீர் வாரும்.
முப்பொருளுணர்ந்து, முதிச்சியடைந்து,
மும்மை தெய்வப் புகழ்கூறும்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.