அடங்கியது அடியனின் ஐயம்!

அடங்கிவிட்டது அடியனின் ஐயம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:20-21.

20அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் தேவனுடைய கிறிஸ்து என்றான்.
21அப்பொழுது அவர்கள் அதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார்.

கிறித்துவில் வாழ்வு:
கடந்து உள்ளில் வாழும் கடவுள்,
காணும்படியாய் வருவாரா?
நடந்து வந்து நம்முன் தோன்றி,
நன்மையை நமக்குத் தருவாரா?
கிடந்தது புரண்டு கேள்விகள் கேட்டேன்;
கிறித்து நெஞ்சில் வருமுன்னர்.
அடங்கிவிட்டது அடியனின் ஐயம்;
ஆண்டவர் இயேசுவே என் மன்னர்!
ஆமென்.

Leave a Reply