இயேசுவே வழி!
இறை வாக்கு: யோவான் 14:6.
- அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
இறை வாழ்வு:
வழி எது? வாய்மை எது?
வாழ்பவரின் உயிர் எது?
தெளிவிலாது நானிருந்தேன்.
தெரியார் வாழ்வில் தீது.
மொழி எது, மேன்மை எது?
மெய்யின்பம் இங்கு எது?
அழியா அன்பென்றார் ஏசு;
அது ஒன்றே இறை தூது!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.