இறை மாட்சி!
எதைச் செய்தாலும் இறையாட்சிக்கு,
என்று வாழ்தல் கிறித்தவம்.
அதன் விளைவும் அவர் மாட்சிக்கு,
அமைய விரும்பின் நெறித்தனம்.
இதைத் துறந்த இன்றையப் போக்கு,
எதனால் என்றால், வெறித்தனம்.
விதைக்கும் முன்னே, விளைவை நோக்கு;
வேண்டாம் என்றும் நரித்தனம்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.