நல்லாயன் !

வாக்கு: யோவான் 10:11.

வாழ்வு:


ஐந்தறிவுள்ள ஆட்டைக் காக்க,

ஆறறிவாளன் உயிர் விட்டால்,

எந்த அறிஞர், இங்கு சொல்வார்,

அவனோர் ஆட்டின் நல்லாயன்?


மைந்தனிறையோ இவர் போலல்ல;

மனித வடிவாய்த் தனையிறக்கி, 

சொந்த உயிரால் நம்மை மீட்டார்.

சொல்வோம், இவரே நல்லாயன்!


ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.