இறை வாக்கு: யோவான் 9:24-25.
இறை வழி:
வெறுப்பு கொண்டோர் பேச்சு கேட்டால்,
வீண்பழிச் சொற்கள் நிறைந்திருக்கும்.
பொறுப்பு அற்றோர் செயற்பாட்டால்,
பொறுமை கூட குறைந்திருக்கும்.
நெருப்பு என்கிற பழிச்சொல் எரித்தால்,
நீங்களும் நானும் என்னாவோம்?
விருப்பு இறையுள் நாம் சிரித்தால்,
விடுதலையாகிப் பொன்னாவோம்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.