ஆன்ம அறிவு!
நற்செய்தி: யோவான் 9: 12- 16.
12. அப்பொழுது அவர்கள்: அவர் எங்கே என்றார்கள். அவன்: எனக்குத் தெரியாது என்றான்.13. குருடனாயிருந்த அவனைப் பரிசேயரிடத்திற்குக் கொண்டுபோனார்கள்.14. இயேசு சேறுண்டாக்கி, அவன் கண்களைக் திறந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது.15. ஆகையால் பரிசேயரும் அவனை நோக்கி: நீ எப்படிப் பார்வையடைந்தாய் என்று மறுபடியும் கேட்டார்கள். அதற்கு அவன்: அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், காண்கிறேன் என்றான்.16. அப்பொழுது பரிசேயரில் சிலர்: அந்த மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளாததினால் அவன் தேவனிடத்திலிருந்து வந்தவனல்ல என்றார்கள். வேறுசிலர்: பாவியாயிருக்கிற மனுஷன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இவ்விதமாய் அவர்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று.
நல்வழி:
சடங்குகள் வழியாய் இறையருள் நாடும்,
சமயத்தவர்கள் பலர் உண்டு.
உடம்பினை ஒடுக்க, உரக்கப் பாடும்,
ஊர்ப்பாடகர்கள் சிலர் உண்டு.
அடங்கா நெஞ்சை அடக்கி ஆளும்,
ஆன்ம அறிவு எதில் உண்டு?
கிடங்குகள் நிரப்பும், கிறித்து வாழும்,
கேடிலா அன்பு அதில் உண்டு!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.