பார்க்கும் கோணம்!

பார்க்கும் கோணம் பாரீர்!
நற்செய்தி: யோவான் 9:17. 

17. மறுபடியும் அவர்கள் குருடனை நோக்கி: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய் என்றார்கள். அதற்கு அவன்: அவர் தீர்க்கதரிசி என்றான்.  

நல்வழி:

மனிதனாய்ப் பார்த்த கண்கள் அன்று,

மறுபடி இயேசுவைப் பார்க்கையிலே,

புனிதனாகிய இறை வாக்கினன் என்று,

புதிய நோக்கில் பார்ப்பதும் பார்.

இனிமையான இறைவாக்கினன் இன்று,

 இன்னும் உயர்ந்து நிற்கையிலே,

கனியுமந்த காலம் வருமேயென்று,

காத்திருப்பார் ஆர்ப்பதும் பார்!

ஆமென். 

-கெர்சோம் செல்லையா.