திருச்சட்டம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:20-21.
20 விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாயே என்றார்.
21 அதற்கு அவன்: இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான்.
கிறித்துவில் வாழ்வு:
அத்து மீறும் மனிதரைத் தடுக்கும்,
ஆண்டவர் வழியே திருச்சட்டம்.
பத்து கட்டளை என்று சுருக்கும் ,
பழைய ஏற்பின் அருட்திட்டம்.
மொத்த கருத்தும் உள்ளடக்கும்,
முடிவு கேட்டது திருக்கூட்டம்.
இத்தரையில் இயேசு காட்டும்,
இனிய அன்பால் விண் எட்டும்!
ஆமென்.