வங்கியும் வறியரும்!

வங்கியும், வறியரும்!


வங்கியும், வறியரும்!
தாழ்ந்து தளர்ந்து அயருகையில்,
தம் நிலை உயர வேண்டிடுவோர்,
வாழ்ந்து வளர்ந்து உயருகையில்,
வறியரை நோக்க மறுப்பது ஏன்?
ஆழ்ந்து கற்றவர் தருஞ் சட்டம்,
அனைவரும் ஒன்றெனக் கருதாமல்,
வீழ்ந்து கிடக்கும் எளியவரை,
விரட்டும் படியாய் இருப்பது ஏன்?
-கெர்சோம் செல்லையா.


ஒடிசாவின் நுவாபாரா மாவட்டம், பாராகான் கிராமத்தில் உத்கல் கிராம வங்கி உள்ளது. இங்கு ஜன்தன் வங்கிக் கணக்கில் பெண்களுக்கு மத்திய அரசால் செலுத்தப்பட்டுள்ள ரூ.1,500-ஐ பெறுவதற்காக, புஞ்சிமதி தேய் என்ற 60 வயது பெண் கடந்த 9-ம் தேதி சென்றுள்ளார். 100 வயதான தனது தாய் லாபே பாகல் படுத்த படுக்கையாக இருப்பதால் அவரது கணக்கில் செலுத்தப்பட்டுள்ள ரூ.1,500-ஐ தன்னிடம் தர வேண்டும் என கோரியுள்ளார். ஆனால் லாபே பாகல் நேரில் வந்தால்தான் பணம் தரமுடியும் என வங்கி மேலாளர் கண்டிப்புடன் சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து, மறுநாள், படுத்த படுக்கையாக இருந்த 100 வயது தாயை வங்கிக்கு புஞ்சிமதி தேய் கட்டிலுடன் தெருக்களில் இழுத்துச் சென்றார்.
(தமிழ் இந்து)

Leave a Reply