வெற்றிடம் வேண்டாம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:24-26.
24அசுத்தஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி, |
25அதில் வரும்போது, அது பெருக்கி ஜோடிக்கப்பட்டிருக்கக் கண்டு, |
26திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைக் கூட்டிக் கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும் என்றார். கிறித்துவில் வாழ்வு: வெற்றிடமாக வீட்டை வைத்தால், விரும்பாப் பேய்கள் படியேறும். சுற்றிலுமுள்ளத் தீயோர் குழுவும், சொந்தம் பேசிக் குடியேறும். பற்றினைப்பெற்று, பரமனைப் பிடித்தால், பாழ்பட்ட வாழ்வும் சீராகும். கொற்றவரேசு குடித்தனம் வந்தால், கோணல் யாவும் நேராகும்! ஆமென். |