பழங்கதையல்ல, வரலாறு!
பாட்டியின் பாட்டி யாரெனக் கேட்டால்,
பழங்கதை என்று சொல்வோரே,
போட்டியில் நாளை பேரரின் பேரர்,
பொருந்தா உம் பெயர் சொல்லாரே!
நாட்டினை அறிய நடந்தது அறிவீர்;
நன்மை இதுவெனச் சொல்வாரே.
கேட்டினை நீக்க, ஆய்வுகள் செய்து,
கீழடிப் பெருமை சொல்வீரே.
-கெர்சோம் செல்லையா.