அடகு வைக்காதீர்!

அடகு வைக்காதீர்!

ஐந்து காசில் உண்மை அற்றோர்
ஐந்தாயிரத்தை எடாரோ?
சொந்த வாழ்வில் நேர்மை அற்றோர்,
சுவைக்கும் பொதுவில் கெடாரோ?
இந்த நாளின் திரைப்படத்தவரால்,
எத்தனை இழிவு காணீரோ?
செந்தமிழ் நாட்டை அடகு வைக்காதீர்;
சிந்திப்பவரே நாணீரோ?

-கெர்சோம் செல்லையா.

No automatic alt text available.
LikeShow More Reactions

Comment

வாருங்கள், வறுமையை ருசித்தவரே!

வறுமையை ருசித்தவரே வாருங்கள்!

காட்சி காணாக் கண்களினால்,
மாட்சி அறிய இயலாதே!
மீட்சி என்பது தெரியாமல்,
ஆட்சி அமைக்க முயலாதே!

நேற்று வறுமை ருசித்தவரே,
மாற்று வழியைத் தருவாரே!
வேற்று மனிதர் தெரியாரே;
தோற்று போகவே வருவாரே!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: table, outdoor and water
LikeShow More Reactions

Comment