தாவீதின் இறைவாக்கு!

தாவீதின் இறைவாக்கு!
நற்செய்தி மாலை: மாற்கு 12:35-37.
“இயேசு கோவிலில் கற்பித்துக் கொண்டிருக்கும்போது, ‘ மெசியா தாவீதின் மகன் என்று மறைநூல் அறிஞர் கூறுவது எப்படி? தூய ஆவியின் தூண்டுதலால், ‘ ஆண்டவர் என் தலைவரிடம், ″ நான் உம் பகைவரை உமக்கு அடிபணியவைக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும் ″ என்று உரைத்தார் ‘ எனத் தாவீதே கூறியுள்ளார் அல்லவா! தாவீது அவரைத் தலைவர் எனக் குறிப்பிடுவதால் அவர் அவருக்கு மகனாக இருப்பது எப்படி? ‘ என்று கேட்டார். அப்போது பெருந்திரளான மக்கள் இயேசு கூறியவற்றை மனமுவந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.”
நற்செய்தி மலர்:
தாவிதின் மகனாய்ப் பிறப்பவர் எனினும்,
தலைவர் என்றுதான் விளித்தார்.
தாழ்மையில்லா உலகம் எனினும்,
தந்தை அன்பில்தான் அளித்தார்.
பாவியர் மீட்பு அரிதே எனினும்,
பரிந்தவர் குருதிதான் தெளித்தார்.
பகுத்தறிவிற்குப் புரியாதெனினும்,
பணிந்தவர் யாவருந்தான் களித்தார்!
ஆமென்.

No automatic alt text available.