பெண்டிர் பின்னர் போவோர்…

 

 பெண்டிர் பின்னர் போவோர்…

நற்செய்தி மாலை: மாற்கு 6:14-17
“இயேசுவின் பெயர் எங்கும் பரவியது. ஏரோது அரசனும் அவரைப் பற்றிக் கேள்வியுற்றான். சிலர், ‘ இறந்த திருமுழுக்கு யோவான் உயிருடன் எழுப்பப்பட்டு விட்டார்; இதனால் தான் இந்த வல்ல செயல்கள் இவரால் ஆற்றப்படுகின்றன ‘ என்றனர். வேறு சிலர், ‘ இவர் எலியா ‘ என்றனர். மற்றும் சிலர், ‘ ஏனைய இறைவாக்கினரைப்போல் இவரும் ஓர் இறைவாக்கினரே ‘ என்றனர். இதைக் கேட்ட ஏரோது, ‘ இவர் யோவானே. அவர் தலையை நான் வெட்டச் செய்தேன். ஆனால் அவர் உயிருடன் எழுப்பப்பட்டு விட்டார் ‘ என்று கூறினான். இதே ஏரோது, தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டிருந்தான்; அவள் பொருட்டு ஆளனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான்.”

நற்செய்தி மலர்:
பெண்டிர் பின்னர் போவோர் வாழ்வு
பின்னல் அவிழ்ந்த சடைபோல் ஆகும்.
எண்ணம் யாவும் தவறாய்ப் போகும்;
ஏற்படும் இழப்பும் வலியாய் நோகும்.
மண்ணாய்ப் போன மன்னர் பலரும்
மாண்பை இழந்தது பெண்ணாலாகும்.
கண்ணால் கூட கருத்தை இழக்கா
கடவுளைப் பார்ப்போம், நன்மையாகும்!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

Leave a Reply