நெஞ்சின் நேர்மை

நற்செய்தி மாலை: மாற்கு 6:18-20.
“ஏனெனில் யோவான் ஏரோதிடம், ‘ உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல ‘ எனச் சொல்லிவந்தார். அப்போது ஏரோதியா அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவரைக் கொலை செய்ய விரும்பினாள்; ஆனால் அவளால் இயலவில்லை. ஏனெனில் யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்து வந்தான். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான்.”
நற்செய்தி மலர்:
நெஞ்சின் நேர்மை நிமிரச் செய்யும்;
நெறியற்றோர் முன் உயரச் செய்யும்.
மிஞ்சும் தீதை மிரளச் செய்யும்;
மீட்கும் வழியை ஒளிரச் செய்யும்.
அஞ்ச வேண்டாம், தீமை கண்டு;
அதனை அழிக்க ஆண்டவருண்டு.
தஞ்சம் கேட்போம், தாழ்மை கொண்டு;
தருவார் இயேசு, மேன்மையுண்டு!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.