இறப்பை வென்ற இறைமகன்!

இறப்பை வென்ற இறைமகன்!

நல்வாக்கு: மத்தேயு:28:10.
“அப்பொழுது இயேசு அவர்களிடம், ‘ அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் ‘ என்றார்.”

நல்வாழ்வு:
இறப்பை வென்ற இறைமகன் இருக்க,
இனிமேல் நமக்கேன் அச்சம்?
பிறப்பின் நோக்கம் தெளிவாய்த் தெரிய,
பிணி, மூப்பெல்லாம் எச்சம்.
உறக்கம் விட்டு எழுவது போன்று,
ஒருநாள் நாமும் எழுவோம்.
திறப்பின் வாயில் நிற்கும் தெய்வம்,
தெரிந்து கொண்டார், மகிழ்வோம்!
ஆமென்.

இறப்பை வென்ற இறைமகன்!<br />
நல்வாக்கு: மத்தேயு:28:10.<br />
"அப்பொழுது இயேசு அவர்களிடம், ' அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் ' என்றார்."</p>
<p>நல்வாழ்வு:<br />
இறப்பை வென்ற இறைமகன் இருக்க,<br />
இனிமேல் நமக்கேன் அச்சம்?<br />
பிறப்பின் நோக்கம் தெளிவாய்த் தெரிய,<br />
பிணி, மூப்பெல்லாம் எச்சம்.<br />
உறக்கம் விட்டு எழுவது போன்று,<br />
ஒருநாள் நாமும் எழுவோம்.<br />
திறப்பின் வாயில் நிற்கும் தெய்வம்,<br />
தெரிந்து கொண்டார், மகிழ்வோம்!<br />
ஆமென்.
LikeLike ·  · Share

அய்யா, என் மனைவிக்காக வேண்டுங்கள்!

நகைச்சுவை நற்செய்தி!
அய்யா, என் மனைவிக்காக வேண்டுங்கள்!

அந்த நற்செய்தியாளர் அந்த திருக்கூட்டத்திற்குச் சென்றிருந்தபோது, அவர் முன் இறைவேண்டல் ஏறெடுக்க ஒரு பெண்மணி வந்திருந்தார். தன் கணவன் குடித்துவிட்டுத் தன்னை அடிப்பதாகவும், அவர் மீட்கப்பட வேண்டும் என்றும், விண்ணப்பம் வைத்தார். நற்செய்தியாளரும் வேண்டுதல் மேற்கொண்டார்.

அடுத்த ஆண்டு, அவ்வூர் கூட்டத்திற்குச் சென்றிருந்தபோது அந்த நற்செய்தியாளர் முன் அந்த பெண்மணி வந்து, தன் கணவரைக் காண்பித்து, ‘இறையருளால் இப்போது இவர் திருந்தி விட்டார்; நாங்கள் மகிழ்வுடன் இருக்கிறோம்’ என்று கூறி, நன்றி மன்றாட்டு கூறிச்சென்றார்.

மீண்டும் அடுத்த ஆண்டிலும், அந்த ஊழியர் அந்த ஊர்த் திருக்கூட்டத்திற்குச் சென்றார். அந்தப் பெண்மணியைக் காணவில்லை. அவர் கணவர் வந்திருந்தார். அவர் தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் இறைவேண்டல் ஏறெடுக்கக் கேட்டார்.
“முன்பு நான் குடித்து வந்து மனைவியை அடிப்பேன். அவள் அழுது வேண்டுவாள். இப்போது நான் இயேசுவை ஏற்றுக்கொண்டேன்; குடிப்பதுமில்லை; அவளை அடிப்பதுமில்லை. ஆனால்….. அவள் இப்போது என்னை அடிக்கிறாள்! அய்யா, எனக்காக வேண்டுங்கள்; என் மனைவி திருந்த மன்றாடுங்கள்!”

“…சாரா ஆபிரகாமைத் தலைவர் என்றழைத்து அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தார். நீங்களும் நன்மை செய்து, எவ்வகை அச்சுறுத்தலுக்கும் அஞ்சாதிருப்பீர்களென்றால் சாராவின் புதல்வியராய் இருப்பீர்கள்.”(1 பேதுரு 3:6).

நகைச்சுவை நற்செய்தி!
அய்யா, என் மனைவிக்காக வேண்டுங்கள்!

அந்த நற்செய்தியாளர் அந்த திருக்கூட்டத்திற்குச் சென்றிருந்தபோது, அவர் முன் இறைவேண்டல் ஏறெடுக்க ஒரு பெண்மணி வந்திருந்தார். தன் கணவன் குடித்துவிட்டுத் தன்னை அடிப்பதாகவும், அவர் மீட்கப்பட வேண்டும் என்றும், விண்ணப்பம் வைத்தார். நற்செய்தியாளரும் வேண்டுதல் மேற்கொண்டார்.

அடுத்த ஆண்டு, அவ்வூர் கூட்டத்திற்குச் சென்றிருந்தபோது அந்த நற்செய்தியாளர் முன் அந்த பெண்மணி வந்து, தன் கணவரைக் காண்பித்து, 'இறையருளால் இப்போது இவர் திருந்தி விட்டார்; நாங்கள் மகிழ்வுடன் இருக்கிறோம்' என்று கூறி, நன்றி மன்றாட்டு கூறிச்சென்றார்.

மீண்டும் அடுத்த ஆண்டிலும், அந்த ஊழியர் அந்த ஊர்த் திருக்கூட்டத்திற்குச் சென்றார். அந்தப் பெண்மணியைக் காணவில்லை. அவர் கணவர் வந்திருந்தார். அவர் தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் இறைவேண்டல் ஏறெடுக்கக் கேட்டார்.
"முன்பு நான் குடித்து வந்து மனைவியை அடிப்பேன். அவள் அழுது வேண்டுவாள். இப்போது நான் இயேசுவை ஏற்றுக்கொண்டேன்; குடிப்பதுமில்லை; அவளை அடிப்பதுமில்லை. ஆனால்..... அவள் இப்போது என்னை அடிக்கிறாள்! அய்யா, எனக்காக வேண்டுங்கள்; என் மனைவி திருந்த மன்றாடுங்கள்!"

"...சாரா ஆபிரகாமைத் தலைவர் என்றழைத்து அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தார். நீங்களும் நன்மை செய்து, எவ்வகை அச்சுறுத்தலுக்கும் அஞ்சாதிருப்பீர்களென்றால் சாராவின் புதல்வியராய் இருப்பீர்கள்."(1 பேதுரு 3:6).

ஆழ்த்திடும் குழியுள் அடங்கா வாழ்வு!

ஆழ்த்திடும் குழியுள் அடங்கா வாழ்வு!

நல்வாக்கு: மத்தேயு 28: 8-9.
“அவர்களும் கல்லறையைவிட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய் அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள். திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரை அணுகி அவர் காலடிகளைப் பற்றிக் கொண்டு பணிந்து நின்றார்கள்.”

நல்வாழ்வு:
வாழ்த்தொலி உரைத்து, வந்திடும் இறையை,
வணங்குதல் நம் கடன், நண்பர்களே,

வீழ்த்திடும் வினையை, வீழ்த்தி எழுந்த,
விண்மகன் தொழுதல், நன்மைகளே.

தாழ்த்திட மறுத்து, தலைவனை வெறுத்து,
தம்மை இழத்தல், நாணுங்களே.

ஆழ்த்திடும் குழியுள் அடங்கா வாழ்வு
அப்படி எழுதல், காணுங்களே!
ஆமென்.

ஆழ்த்திடும் குழியுள் அடங்கா வாழ்வு!

நல்வாக்கு: மத்தேயு 28: 8-9.
"அவர்களும் கல்லறையைவிட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய் அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள். திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரை அணுகி அவர் காலடிகளைப் பற்றிக் கொண்டு பணிந்து நின்றார்கள்."

நல்வாழ்வு:
வாழ்த்தொலி உரைத்து, வந்திடும் இறையை, 
வணங்குதல் நம் கடன், நண்பர்களே,

வீழ்த்திடும் வினையை, வீழ்த்தி எழுந்த, 
விண்மகன் தொழுதல், நன்மைகளே.

தாழ்த்திட  மறுத்து, தலைவனை வெறுத்து,  
தம்மை இழத்தல், நாணுங்களே.

ஆழ்த்திடும் குழியுள் அடங்கா வாழ்வு 
அப்படி  எழுதல், காணுங்களே!
ஆமென்.
LikeLike ·  · Share

எழுந்தவரைக் காண்பீர்கள்!

எழுந்தவரைக் காண்பீர்கள்!
நல்வாக்கு: மத்தேயு 28:7
“நீங்கள் விரைந்து சென்று, ‘ இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் ‘ எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள். இப்பொழுதே நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன் ‘ என்றார்.’
நல்வாழ்வு:
எழுந்தவரைக் காண்பீர்கள்;
இனியோரே பாருங்கள்.
அழுந்தும் சுமை நீங்கும்;
ஆண்டவருள் வாருங்கள்.
விழுந்தவர்கள் எழுந்தின்று
வெற்றி கொள்வதுபோல்,
தொழுதுள்ளில் பெறுவீர்கள்;
தூயவரைச் சேருங்கள்!
ஆமென்.

கிடைத்த செய்தி, மகிழ்ச்சி!

கிடைத்த செய்தி, மகிழ்ச்சி!
இறைவாக்கு: மத்தேயு 28:1-6.
இயேசு உயிர் பெற்று எழுதல்:
“ஓய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள். திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார். அவருடைய தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்தது. அவரைக் கண்ட அச்சத்தால் காவல் வீரர் நடுக்கமுற்றுச் செத்தவர் போலாயினர்.அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, ‘ நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும். அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.”
இறைவாழ்வு:
அடைத்த கல் புரண்டிருக்க,
அதிலொருவன் அமர்ந்திருக்க,
கிடைத்த செய்தி மகிழ்ச்சி,
கிறித்து உயிர்த்த நிகழ்ச்சி.
படைத்தளங்கள் அலறிவிழ,
பகைவரெல்லாம் அடிபணிய,
உடைத்துவரும் வெள்ளமென,
உயிர்த்தார், அவர்க்கே புகழ்ச்சி!
ஆமென்.
Photo: கிடைத்த செய்தி, மகிழ்ச்சி!
இறைவாக்கு: மத்தேயு 28:1-6.
இயேசு உயிர் பெற்று எழுதல்:
"ஓய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள். திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார். அவருடைய தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்தது. அவரைக் கண்ட அச்சத்தால் காவல் வீரர் நடுக்கமுற்றுச் செத்தவர் போலாயினர்.அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, ' நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும். அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்."
இறைவாழ்வு:
அடைத்த கல் புரண்டிருக்க,
அதிலொருவன் அமர்ந்திருக்க,
கிடைத்த செய்தி மகிழ்ச்சி,
கிறித்து உயிர்த்த நிகழ்ச்சி.
படைத்தளங்கள் அலறிவிழ,
பகைவரெல்லாம் அடிபணிய,
உடைத்துவரும் வெள்ளமென,
உயிர்த்தார், அவர்க்கே புகழ்ச்சி!
ஆமென்.