ஒருவரைக் கொல்லல்!

ஒருவரைக் கொன்று..

இறை மொழி: யோவான் 18:12-14.

12. அப்பொழுது போர்ச்சேவகரும், ஆயிரம் போர்ச்சேவகருக்குத் தலைவனும், யூதருடைய ஊழியக்காரரும் இயேசுவைப்பிடித்து, அவரைக் கட்டி,

13. முதலாவது அவரை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அவன் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவுக்கு மாமனாயிருந்தான்.

14. ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்குமென்று யூதருக்கு ஆலோசனை சொன்னவன் இந்தக் காய்பாவே.

இறை வழி:

ஒருவரைக் கொன்று ஊரைக் காப்பதும்,

ஊரை அழித்து நாட்டை மீட்பதும்,

பெருமதி பெறாத பேதையர் கருத்து;

பிழை உணர்ந்து உள்ளம் திருத்து.

இருவரோ மூவரோ எண்ணிக்கை அல்ல;

யாவரைக் காப்பதே இறையின் நல்ல,

விருப்பெனக் கண்டு பணிவாய் இன்று;

விண் அருளில் வாழ்வோம் நன்று!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

No photo description available.