என்ன பேசுகிறோம்?
இறைவாக்கு: யோவான் 12:5
50 அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.
இறைவாழ்வு:
எதை எதையோ பேசுகிறோம்.
எண்ணாமல் பேசுகிறோம்.
கதை கதையாய் பேசுகிறோம்.
கற்பனையால் பூசுகிறோம்.
அதை பின்னர் ஆராய்ந்தால்,
அறிவின்மை வீசுகிறோம்.
இதை மாற்றும் வழியுண்டா?
இறை உள்ளில் பேசட்டுமே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.