அமைதி!

அமைதி தாரும் ஆண்டவரே!

இறைவாக்கு: யோவான் 14: 27.

  1. சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.

இறை வாழ்வு:

எழுதும் எனக்கும், அமைதி தாரும்.
இங்கே தருபவர் எவருமில்லை,
அழுதும் அரற்றும், அகமும் பாரும்.
அப்படிக் கேட்பது தவறுமில்லை.
தொழுதும் பணிந்தும், தேய்ந்து மாறும்,
தெய்வ பிள்ளைக்குக் கதியுமில்லை.
விழுவது என்றும், தீங்கெனக் கூறும்;
விண்ணை மிஞ்சும் மதியுமில்லை!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.