The Truth

கிறித்துவின் அருளைப் பெறுவதற்குக்
கேட்போமா நாம் நற்செய்தி?
வெறித்தனச் செயலை விடுவதற்கு,
வேண்டும் நமக்கு அருட்செய்தி!
நல்வாழ்த்து:
வாக்கருளும் மைந்தனே போற்றி;
வாழ்விக்கும் தந்தையே போற்றி.
காக்க வரும் ஆவியர் போற்றி;
காலமெலாம் இறையே போற்றி!
நல்வாக்கு:மத்தேயு 25:5-7.
“மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர். நள்ளிரவில், ‘ இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள் ‘ என்ற உரத்த குரல் ஒலித்தது.  மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர்.”
நல்வாழ்வு:

இல்லாத எண்ணெய்
இருப்பதாய் எண்ணி,
விளக்கைக் கொளுத்துகின்றார்;
வெட்கம் கொள்கின்றார்!
கல்லாத மூடர்
வரிசையில் நின்று,
கருத்தை இழக்கின்றார்;
கைவிடப் படுகின்றார்;
எல்லோரும் மீள
ஏங்கும் இறைவன்
எண்ணெய் தருகின்றார்;
ஏற்பவர் மகிழ்கின்றார்.
நல்லாயன் சொல்லே,
விளக்கின் எண்ணெய்.
நம்பினோர் நிறைக்கின்றார்;
நல்லொளி கொடுக்கின்றார்!
ஆமென்.

 

Leave a Reply